/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Tuesday, September 11, 2012

பூமியின் அழிவில் இணையத்தின் பங்கு [Infographic]!!


                                           

இப்பொழுது உலக நாடுகள் அனைத்திருக்கும் உள்ள முக்கியமான பிரச்சினை உலக வெப்பமயமாதல். தொழில்நுட்பம் வளர வளர நன்மைகளோடு தீமைகளும் சேர்ந்தே வளர்கின்றது. நாம் பயன்படுத்தும் எலெக்ட்ரானிக் பொருட்கள், வாகனங்கள் ஆகியவற்றில் இருந்து வெளிவரும் கார்பன் டை ஆக்சைடு வாயுவினால் பூமி வெப்பமாகி கொண்டு வருகிறது. இதனால் துருவங்களில் உள்ள பனி கட்டிகள் உறைந்து கடல் நீர் மட்டம் அதிகரிக்கும் என்றும் அதனால் உலகின் பெரும்பாலான பகுதிகள் கடல்நீரில் மூழ்கி விடும் என்றும் விஞ்ஞானிகள் கருது கின்றனர். 

இந்த பூமியின் அழிவில் நாம் தினமும் உபயோகிக்கும் இணையத்தின் பங்கும் கணிசமாக உள்ளது. இன்டெர் நெட்டுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்னு கேக்குறீங்கள? ஒரு சிறிய உதாரணம்

கூகுளின் ஒரு தேடல் மூலம் உருவாகும் CO2 ஒரு கார் மூன்று இன்ச் நகர்ந்தால் உருவாகும் CO2 அளவிற்கு சமமாம்.  மற்றும் ஒரு ஸ்பாம்  மெயில் ௦.3 கிராம் அளவுடைய கார்பன்-டை-ஆக்சைட் வாயுவை வெளியிடுகிறது. ஒரு வருடத்திற்கு சராசரியாக 64 ட்ரில்லியன் ஸ்பாம் மெயில்கள் அனுப்ப படுகிறதாம். இந்த ஸ்பாம் மெயில்கள் 1.6 மில்லியன் கார்களில் இருந்து வெளிவரும் கார்பன்-டை-ஆக்சைடு அளவுக்கு சமமாக CO2 வாயுவை வெளியிடுகிறதாம். 

பிரபல இணையதளமான Wordstream உலக அழிவில் இணையத்தின் பங்கு என்ற தலைப்பில் ஒரு Infographic வெளியிட்டு உள்ளது. 

அமிதாப்பின் பேஸ்புக் பக்கம்.!!



பாலிவுட்டின் ஷாயென்ஷா அமிதாப் பேஸ்புக்கிவாசியாகியிருக்கிறார்.பேஸ்புக்கில் நுழைந்திருக்கும் அமிதாப்புக்கு லைக்குகள் மூலம் வரவேற்பு குவிந்திருக்கிறது.முதல் ஒரு மணி நேரத்திலேயே 8 லட்சம் லைக்குகளுக்கு மேல் கிடைத்திருக்கிறது.
இப்படி ஒரு வரவேற்பு பேஸ்புக்கில் வேறு எந்த பிரபலத்திற்கு சாத்தியம் என்று தெரியவில்லை.
ஆனால் இதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை.அமிதாப் பாவிவுட்டில் மட்டும் சூப்பர் ஸ்டார் அல்ல இண்டெர்நெட்டிலும் அவர் சூப்பர் ஸ்டாராக தான் இருக்கிறார்.அதாவது இணைய உலகிலும் அவர் கொண்டாடப்பட்டு வருகிறார்.படிக்கப்படுகிறார்.பின் தொட்ரப்படுகிறார்.
இந்த அபிமானத்திற்கும் வரவேற்பிற்கும் காரணம் அமிதாப் இண்டெர்நெட்டை சரியாக பயன்படுத்துகிறார் என்பதே.பயன்படுத்துகிறார் என்றால் தன்னை முன்னிலைப்படுத்தி கொள்ளவோ தனது சாதனைகளை மார் தட்டி கொள்ளவோ அல்ல! மாறாக தனது ரசிகர்களை

அப்துல் க‌லாமின் பேஸ்புக் பக்கம்!



கலாமின் வாழ்க்கையே ஒரு மைல்கல் தான்.இப்போது அந்த மனிதர் பேஸ்புக்கிலும் ஒரு மைல்கல்லை அடைந்திருக்கிறார்.
ஒரு மில்லியன் வலுவான சமூகமாக திகழ்கிறோம் என அவரே மகிழ்ச்சியோடு இது பற்றி சொல்லியிருக்கிறார்.சமூகம் என கலாம் சொல்வது அவருக்கு பின்னே திரண்டிருக்கும் பேஸ்புக் சமூகத்தை.
ஆம் பேஸ்புக்கில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கலாமின் நண்பர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தொட்டிருக்கிறது.
இளைஞர்களின் கூடாரமாக திகழும் பேஸ்புக்கில் இளைஞர்களின் நம்பிக்கை நாயகரான கலாம் பத்து லட்சம் நண்பர்களை பெற்றிருப்பது ஒன்று வியப்பில்லை தான்.ஆனால் இந்திய மக்கள் மத்தியில்

பேஸ்புக்கில் நுழைந்தார் சச்சின்!.




திரைக்கு வெளியே நாகேஷ் அதிகம் நடித்ததில்லை என்று அவரைப்பற்றிய புத்தகத்தில் சந்திரமவுளி குறிப்பிட்டிருப்பார். அதே போல தான் சச்சினும் ஆடுகளத்திற்கு வெளியே அதிக ஆடியதில்லை.அதாவது அதிகம் பேசியதில்லை.அதிலும் தன்னைப்பற்றி அவர் தற்பெருமை அடித்து கொண்டதுமில்லை.அவரது பேட்டிகள் கூட கிரிக்கெட் தொடர்பானதாகவே இருக்கும்.அப்போது கூட பந்துக்கு ஏற்ற ஷாட்டை போல கேள்விக்கேற்ற பதில் தான் வருமே தவிர தேவையில்லாத கருத்துக்கள் இருக்காது.
இந்த அமைதியும் அடக்கமும் தான் சச்சின்.
அவரது பேஸ்புக் பக்கமும் இப்படி தான் இருக்கிறது.
ஆம் சச்சின்
More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget