/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Saturday, March 17, 2012

தொடர்ந்து நோக்கியா முதல் இடத்தில் !!!

மொபைல் ஸ்மார்ட் போன் விற் பனைச் சந்தையில், பன்னாட்டளவில் நோக்கியாவின் இடத்தை சாம்சங் கைப்பற்றினாலும், இந்தியாவில் மொத்த மொபைல் போன் விற்பனையில், நோக்கியாதான் முதல் இடத்தில் உள்ளது.

சைபர்மீடியா ஆய்வு மையம் மேற்கொண்ட ஆய்வில், இந்தியாவில் ஸ்மார்ட் போன்கள் வரவினால், மொத்த மொபைல் போன் விற்பனை, 2011 ஆம் ஆண்டில் 10% உயர்ந்து 18 கோடியே 34 லட்சமாக உயர்ந்தது.

2010 ஆம் ஆண்டில் இது 16 கோடியே 65 லட்சமாக இருந்தது. ஸ்மார்ட் போன்கள் விற்பனை 87% உயர்ந்து, 1 கோடியே 12 லட்சமாக இருந்தது. முந்தைய ஆண்டில் இது 60 லட்சமாக இருந்தது. மற்ற வசதிகள் கொண்ட மொபைல் போன்களின் விற்பனை 7% உயர்ந்து 17 கோடியே 22 லட்சமாக இருந்தது. இது 2010 ஆம் ஆண்டில் 16 கோடியே 5 லட்சமாக இருந்தது.

மொத்த மொபைல் போன் விற்பனையில், நோக்கியா 31% பங்கினைக் கொண்டு, முதல் இடத்தைப் பிடித்தது. சாம்சங் இரண்டாவது இடத்தில் 15% பங்கினைக் கொண்டிருந்தது. சென்ற ஆண்டில் மட்டும் இந்திய ஸ்மார்ட் போன் சந்தையில், 30 நிறுவனங்கள் 150 மாடல் போன்களை விற்பனைக்குக் கொண்டு வந்தன.

நடப்பு 2012 ஆம் ஆண்டில், என்.எப்.சி. மற்றும் முப்பரிமாண கேம்ஸ் ஆகிய புதிய வசதிகளுடன் அதிக எண்ணிக்கையில் மொபைல் போன்கள் வரும் என எதிர்பார்க் கலாம். இந்த ஆண்டில், நோக்கியா மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து, அதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 7.5 மாங்கோவினைத் தன் மொபைல் போன்களில் தர இருக்கிறது. இதன் மூலம் அதிக எண்ணிக்கையில், பல புதிய ஸ்மார்ட் போன்களை, நோக்கியா தரும் என எதிர்பார்க்கலாம்.

ஒன்றுக்கு மேற்பட்ட சிம் இயக்கம் கொண்ட மொபைல் போன்கள், மொத்த எண்ணிக்கையில் 61% இடத்தைக் கொண்டிருந்தன. இது சென்ற ஆண்டில் 57% ஆக இருந்தது. இந்த வகையிலும், நோக்கியா ஜி-பை நிறுவனத்தை முதல் இடத்தில் இருந்து தள்ளிவிட்டது. 13% போன்கள் மூலம் முதல் இடத்தை நோக்கியா பிடித்தது.

சாம்சங் 8% பங்கினை மேற்கொண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்தது. இந்த வகையில் ஏற்கனவே இருந்த மைக்ரோ மேக்ஸ் மூன்றாம் இடத்தைக் கொண்டது.

2011 ஆம் ஆண்டில் 3ஜி போன்கள் அதிகம் வரப்பெற்றன. 250 மாடல்களை 30 நிறுவனங்கள் வெளியிட்டன. 153% கூடுதலாக, 1 கோடியே 80 லட்சம் மொபைல் போன்கள் வெளியிடப் பட்டன. 3ஜி இன்னும் அதிக மக்களைச் சென்று அடையவில்லை.

மொத்த இந்தியாவில் 1 கோடியே 50 லட்சம் சந்தாதாரர்களே இந்த வகையை மேற்கொண்டுள்ளனர். இதற்குக் காரணம் மிகவும் மோசமான நெட்வொர்க் இணைப்பாகும். பல இடங்களில், 3ஜி நெட்வொர்க் இன்னும் தரப்படவில்லை.

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையில் தினம் ஒரு தகவலைக் கேட்டு வரும் மக்கள், இந்த ஆண்டில், புதிய நிறுவன இணைப்புகள், முயற்சிகள், கட்டண விகிதங்களை நிச்சயம் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

No comments:

Post a Comment

More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget