/* Flying Css3 menu www.bloggertrix.com*/
Showing posts with label interesting. Show all posts
Showing posts with label interesting. Show all posts

Thursday, July 4, 2013

Important & Useful full forms


»ADIDAS- All Day I Dream About Sports

»»AUDI-Auto Union Deutschland
Ingolstadt

»»BMW- Baverian Motor Works

»»AMW- Asian Motor Works

»»GOOGLE- 






Thursday, March 7, 2013

கூகுள்(Google) நிறுவனத்தைப் பற்றிய ருசிகரமான தகவல்கள்



கூகுள் நிறுவனத்திற்கு உலகில் உள்ள அனைத்து தகவல்களும் அத்துப்படி. எதனைக் கேட்டாலும் இணையத்திலிருந்து தேடி எடுத்துத் தரும் அசகாய சூரன். 

இங்கு கூகுள் நிறுவனத்தைப் பற்றியும், அதன் உருவாக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் பல ருசிகரமான தகவல்களைக் காணலாம்.

1. கூகுள் தேடுதல் தளத்தில் உள்ள சர்ச் இஞ்சினுக்கு, இந்நிறுவனத்தினை நிறுவிய லாரி பேஜ் மற்றும் பிரின் இட்ட பெயர் பேக்ரப் (BackRub).

2. கூகுள் நிறுவனத்தில், முதல் முதலாக நியமிக்கப்பட்ட அலுவலர் பெயர் கிரெய்க் சில்வர்ஸ்டெய்ன் (Craig Silverstein) ஆவார்.

3. கூகுள் நிறுவனத்தின் முதல் அலுவலகம் 

Wednesday, February 13, 2013

Top 25 peoples who changed internet forever!!!

1• Sir Tim Berners Lee – World Wide Web2• Vint Cerf And Bob Kahn –TCP/IP3• Larry Page and Sergey Brin – Google Inc.4• David Filo and Jerry Yang – Yahoo! Inc.



5• Bill Gates – Microsoft


READ MORE

Thursday, February 7, 2013

What to do if FBI shows up to your House!!!

IF YOU ARE CONTACTED BY THE FBI: If an FBI agent comes to your home or workplace, you do not have to answer any questions. Tell the agent you want to speak to a lawyer first. If you are asked to meet with FBI agents for an interview, you have the right to say you do not want to be interviewed. If you agree to an interview, have a lawyer present. You do not have to answer any questions you feel uncomfortable answering, and can say that you will only answer questions on a specific topic.
IF YOU ARE ARRESTED Do not resist arrest,

READ MORE

Saturday, November 17, 2012

Company Logos and their Meanings!!!




Ever wondered what company logos mean and whats the significance behind them? Wonder no more!


Amazon

You might think the arrow does nothing here. But it says that amazon.com has everything from a to z and it also represents the smile brought to   
the customer's face. Wow, that is quite deep.

READ MORE

Thursday, October 18, 2012

டிஸ்க் ஜாக்கியில் சாதனை படைத்த 6 வயது சிறுமி!!



இங்கிலாந்தை சேர்ந்த 6 வயது சிறுமி உலகிலேயே சிறிய டிஸ்க் ஜாக்கி என்று கின்னஸ் சாதனை படைத்திருக்கிறாள்.

விருந்து நிகழ்ச்சிகள், கலை விழாக்கள், பார்ட்டிகள், விடுதிகளில் இசை தொகுப்புகளை தொகுத்து ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கேற்ப பாட்டு மற்றும் ஆல்பங்களை ஒலிக்க செய்பவர் டிஸ்க் ஜாக்கி. (சவுண்ட் சர்வீஸ்).

ஸ்டார் ஓட்டல்களில் நடக்கும்

READ MORE

யார் முட்டாள்...?



புதிதாக பள்ளிக்கு வந்த ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் பாடம் எடுக்க நுழைந்தார். மாணவர்களிடம் கலகலப்பாக பழக வேண்டும் என்ற காரணத்திற்காக,
ஆசிரியை : இந்த வகுப்பில் யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம். நான் ஒன்றும் கோபித்து கொள்ள மாட்டேன்
என்றார். மாணவர்கள் மவுனமாக அமர்ந்திருந்தனர். அப்போது குறும்புக்கார மாணவன்

READ MORE

Saturday, October 13, 2012

பென்குயின் சில வினோதங்கள் தெரியுமா ?





 1. பறவையினத்தை சார்ந்த இவைகளால் பறக்கமுடியாது.

2. தன் வாழ்நாளின் 75 சதவிதத்தை நீருக்கடியிலே உணவு தேடுவதற்காக கழித்துவிடும்.

3. நீரில் நீந்தி செல்வது பறப்பது போன்றே இருக்கும்.
 
4. இதன் உடல் அமைப்பு நன்கு நீந்துவதற்கு ஏதுவாக இருக்கும் இவை மணிக்கு சுமார் 25 கிலோமீட்டர் வேகத்தில் நீந்தும்.

Wednesday, September 26, 2012

இ மெயில் கண்டு பிடித்தது ஒரு தமிழன்தான்!!!


Join Only-for-tamil





ம் . இ மெயில் கண்டு பிடித்தது   ஒரு தமிழன்தான். இந்தியாவால் வெளியேற்றப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட தமிழ் விஞ்ஞானி சிவா அய்யாதுரையை வட அமெரிக்கத் தமிழர் பேரவையான பெட்னா சிறப்பித்து கவுரப்படுத்தியிருக்கிறது. இப்போதெல்லாம் 'மெயில்' வந்துருக்குன்னு வீட்டிலே யாரும் சொன்னால் அது தபாலில் வந்த மெயில் என்ற எண்ணம் வருவதில்லை. 'மெயில்' என்றால் ‘இமெயில்' தான் என்று ஆகிவிட்டது. 


 ஃபேஸ்புக், டுவிட்டர் என வெவ்வேறு


READ MORE

Saturday, September 22, 2012

உங்களை போல ஒருவனை கண்டுபிடிக்க ஒரு இணையதளம்!!!



பொதுவாக நாம் ஒத்த கருத்து உள்ளவர்களை தான் இணையத்தில் வலைவீசி தேடிக்கொண்டிருக்கிறோம்.நட்பு கொள்வதற்கும் கருத்து பரிமாற்றத்திற்கும் கருத்தொற்றுமையும் ஒரே மாதிரியான ரசனையும் அவசியம் என்பதால் பேஸ்புக்கிலும் சரி டிவிட்டரிலும் சரி நம்மை போலவே சிந்திப்பவர்களை தான் தேடிக்கொண்டிருக்கிறோம்.
இந்த தேடலை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் ஆக்கும் வகையில் உங்களை போல உள்ளவர்களை தேட வழி செய்கிறது ‘பைன்ட் பை பேஸ்’ இணையதளம்.
உங்களை போல உள்ளவர்கள் என்றால் உருவத்தில் உங்களைப்போலவே இருப்பவர்கள்.
ஒரே போன்ற தோற்றம் கொண்டவர்கள் உலகில் ஏழு பேர் இருப்பதாக ஒரு கருத்து உண்டல்லவா?இது சரியா தவாறா தெரியாது,ஆனால் சில நேர நேரங்களில் ஒருவரை போலவே தோற்றம் தரக்கூடிய இன்னொருவரை நாமே பார்த்து வியந்திருப்போம்.ஏன் உங்களிடமே

Monday, September 17, 2012

Hiroshima and Nagasaki Today!!!



Since the bombings in 1945 during the final stages of WW2, Hiroshima and Nagasaki then destroyed are completely rebuilt and vibrant today! See these amazing pictures of the cities below.
 
 

Monday, September 10, 2012

15 Most Misspelled Words!!!




A lot of mistakes are made in spelling word. Even though if you are very fluent in your language it is nature writing with spelling mistakes. So every one need to proof read after they complete writing. A few words in English we can make spelling mistakes frequently.

Here below the infographic tells the 15 Most Misspelled words in English. 

Wednesday, September 5, 2012

செவ்வாய் கிரகத்தில் நடந்து செல்லும் அனுபவத்தை பெற - ஊடாடு அகலப் பரப்பு காட்சி (Interactive Panorama)!!




செவ்வாய் கிரகத்தில் நடந்து செல்லும் அனுபவத்தை பெறுவதற்கு 360 பாகையில்
 ஊடாடு அகலப் பரப்பு காட்சியை (interactive Panorama) உருவாக்கியுள்ளார் புகைப்படப்பிடிப்பாளர் Andew Bodrov. மார்ஸ் ரோவரிலிருந்து பெற்றுக்கொண்ட புகைப்படங்களை வைத்து இன்னும் சில மாற்றங்களையும் சேர்த்து interactive Panorama உருவாக்கியுள்ளனர்.  Curiosity rover தரையிறங்கிய இடத்தை இணையத்தின் மூலம் நீங்களும் ஒரு முறை சுற்றிப் பார்த்துவிடலாம்.

இதோ செவ்வாய் கிரகத்தில் நடந்து செல்லும் அனுபவத்தை நீங்களும் பெற இங்கு அழுத்துங்கள்

Thursday, June 28, 2012

Periyar Wildlife Sanctuary!!!


Periyar Wildlife SanctuaryLocated in Kerela, amidst the lush green forests of the Western Ghats, Periyar Wildlife Sanctuary is the most famous wildlife sanctuary in South India. It is also commonly known as the “Elephant Reserve” and the “Tiger reserve” and is spread over 777 km out of which the 360 km is covered by dense, evergreen forests.
It was declared a Tiger Reserve in the year 1972. Four species of primates are found at Periyar – the rare lion-tailed macaque, the Nilgiri Langur, Gee’s Golden Langur, Common Langur And Bonnet Macaque.

Tiger in Periyar Wildlife Sanctuary
Periyar wildlife sanctuary also has a 100 year old artificial lake which offers a one of a kind experience of observing and photographing wildlife from a very short distance. It is home to a 1000 elephants and 46 tigers as well as sambars, boars, deer, bison, lion-tailed macaques and so on.
Sambar Fawn in Periyar Wildlife SanctuaryAs if all this wasn’t enough, this unique sanctuary has 49 species of mammals, 246 species of birds, 28 species of reptiles, 8 species of amphibians, 22 species of fish and 112 species of butterflies. The Nilgiri Tahr, which is rarely to be seen also inhabits this park.
Leopard cat in Periyar Wildlife Sanctuary
Monkeys
squirrel
In addition to all the fauna, the Periyar wildlife sanctuary is also known for its flora. Some of the deeper valley contains trees that have grown to a height of up to 130-140 feet and seem as though they’ve been there since the beginning of time. They form an extremely thick cover which even bright sunlight sometimes finds hard to penetrate.
trees
The edges of the lake and other water bodies contain marshy grasslands. Throughout the park one will also find areas of semi-evergreen forest which are used by many of the animal species as cover.
forests
You can also enjoy a trek to the ruins of the Mangala Devi Temple, a picturesque old stone temple situation in the heart of the Thekkady forest. However, most people come to Periyar to watch the elephants that come down to play at the lake.
elephants
From the lovely scenery on the road up to the lake cruise and a walk through the jungle makes one long to come back for more.
Ideal time to visit the park: From the months of October till June.
How to Reach Priyar wildlife sanctuary:
Air : Kochi (Cochin) at 200 km or Madurai in Tamil Nadu at 140 km are the nearest airports from Periyar.
Rail : Kottayam at 114 km is the nearest railhead from Periyar.
Road : Kumily, the nearest town from Periyar is well served by both state and private buses from Kottayam, Ernakulam and Madurai in Tamil Nadu.

Wednesday, June 27, 2012

கண்டுபிடிப்பின் தந்தை - தாமஸ் ஆல்வா எடிசன் !!!




 

 


Join Only-for-tamil
தாமஸ் ஆல்வா எடிசன் 1847 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் நாள் ஓஹையோவில் உள்ள மிலான் என்னும் ஊரில் பிறந்தார். எடிசன் எழாவது பிறந்த கடைசிப் புதல்வன். தந்தையார் சாமுவெல் எடிசன் ஓர் அமெரிக்கன்; தாயார் நான்சி எடிசன் ஸ்காட்டிஷ் பரம்பரையில் வந்த கனடா மாது. அவள் ஒரு பள்ளிக்கூட ஆசிரியை. தாமஸ் எடிசனுக்கு, சிறு வயதிலேயே காது செவிடாய்ப் போனது! அப்பிறவிப் பெருங் குறை அவரது பிற்கால நடையுடைப் பழக்கங்களை மிகவும் பாதித்ததோடு, அநேகப் புதுப் படைப்புக்குக் காரணமாகவும் இருந்தது! தாத்தா ஜான் எடிசன், 1776 அமெரிக்கச் சுதந்திரப் போரில் [War of Independence] பிரிட்டாஷ் பக்கம் சேர்ந்து, நாட்டை விட்டோடிக் கனடாவில் உள்ள நோவாஸ் கோசியாவில் [Nova Scotia] சரண் புகுந்தார். பிறகு மேற்திசை நோக்கிச் சென்று, கனடாவின் அண்டரியோ மாநிலத்தில் ஈரி ஏரிக் கரையில் உள்ள பாங்கம் [Bangham on Lake Erie] என்னும் ஊரில் குடியேறினார். 1837 இல் கனடாவிலும் உள்நாட்டுக் கலகம் எழவே, ஜான் குடும்பத்தோடு மறுபடியும் அமெரிக்கா நோக்கி ஓடினார்! அங்கு ஓஹையோவில் ஈரி ஏரிக் கரையின் தென் பகுதியில் மிலான் என்னும் ஊரில் குடியேறினர்.

1840 இல் தந்தை சாமுவெல் எடிசன் மிலானில் ஒரு சாதாரண மர வியாபாரத்தைத் தொடங்கினார். அது மென்மேலும் பெருகி விருத்தி யடைந்தது. பின்பு மிஸ்சிகன் போர்ட் ஹூரனில் [Port Huron, MI] கலங்கரைத் தீபக் காப்பாளராகவும் [Lighthouse Keeper], கிராடியட் கோட்டை ராணுவத் தளக் [Fort Gratiot Military Post] கார்பென்ட்டராகவும் சாமுவெல் வேலை பார்த்தார். தாமஸ் எடிசன், சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலில் [Scarlet Fever] கஷ்டப்பட்டுத் தாமதமாக, எட்டரை வயதில்தான் போர்ட் ஹூரன் பள்ளிக்குச் சென்றார். மூன்று மாதங்களுக்குப் பின் ஒரு நாள் தாமஸ் கண்களில் கண்ணீர் சொரிய வீட்டுக்குத் திரும்பினார். 'மூளைக் கோளாறு உள்ளவன் ' என்று ஆசிரியர் திட்டியதாகத் தாயிடம் புகார் செய்தார், எடிசன்! அத்துடன் அவரது பள்ளிப் படிப்பும் முடிந்தது! பள்ளிக்கூட ஆசிரியை யான தாயிடம் மூன்று ஆண்டுகள் வீட்டிலேயே, எடிசன் கல்வி கற்றார். இதைக் கேட்டுப் பலர் ஆச்சரியப் படலாம்! புகழ் பெற்ற இத்தாலியக் கலைஞர், லியனார்டோ டவின்ஸி, அணுக்கரு அமைப்பை விளக்கிய, டேனிஷ் விஞ்ஞானி நீல்ஸ் போஹ்ர் [Niels Bohr], கணித விஞ்ஞான நிபுணர், ஸர் ஐஸக் நியூட்டன் ஆகியோரும் சிறு வயதில் மூளைத் தளர்ச்சி [Isaac Newton] உள்ளவராகப் பள்ளியில் கருதப் பட்டார்கள்! 'எதிலும் இனி நீ உருப்படப் போவதில்லை ' என்று பள்ளித் தலைமை ஆசிரியர், சிறுவன் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனை நோக்கி எச்சரிக்கை செய்தாராம்! மேதை எடிசனும், அகில விஞ்ஞானி, ஐன்ஸ்டைனைப் போல் மந்த புத்திச் சிறுவனாகத்தான் பள்ளிக் கூடத்தில் காட்சி அளித்திருக்கிறார்.

ஏழு வயதில் திடாரென எடிசனின் சிந்தனா சக்தி விரிந்து தூண்டப் பட்டது! சூழ்நிலைச் சாதனங்களின் மேல் ஆர்வம் மிகுந்து அடிப்படை ஆய்வுக் கேள்விகள் எழுந்தன. ஒன்பது வயதில் ரிச்சர்டு பார்க்கர் [Richard Parker] எழுதிய 'இயற்கைச் சோதனை வேதம் ' [Natural & Experimental Philosophy] என்ற நூலைப் படித்து முடித்தார். பதிமூன்றாம் வயதில் தாமஸ் பெயின் [Thomas Paine] எழுதிய ஆக்க நூல்களையும், சிரமத்துடன் ஐஸக் நியூட்டன் இயற்றிய 'கோட்பாடு ' [Principia] என்னும் நூலையும் ஆழ்ந்து படித்தார். தனது 21 ஆம் வயதில், மைகேல் ஃபாரடேயின் [Micheal Faraday] செய்தித்தாளில் இருந்த 'மின்சக்தியின் பயிற்சி ஆராய்ச்சிகள் ' [Experimental Researches in Electricity] பகுதியை ஒருவரி விடாது ஆழ்ந்து படித்து முடித்தார். அந்த ஞானம் அவரது வாழ்க்கையில் ஒரு பெருத்த மாறுதலை உண்டாக்கியது! செய்கை முறையில், சோதனைகள் புரிந்து படைக்கும் திறனை எடிசனுக்கு அவை அடிப்படை ஆக்கின. கணிதப் படிப்பில் லாத எடிசன், விஞ்ஞான இயற்பாடு [Theory] எதுவும் முறையாகக் கற்காத எடிசன், சோதனைகள் மூலம் மட்டிலுமே திரும்பத் திரும்ப முயன்று, ஞான யுக்தியால் பல அரிய நூதனச் சாதனங்களைப் படைத்து உலகப் புகழ் பெற்றார்.

தானாக இயங்கும் தந்திக்குறிப் பதிவுக் கருவி:

1859 இல் எடிசன் தன் பன்னிரண்டாம் வயதில் பள்ளிப் படிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு, டெட்ராய்ட்-போர்ட் ஹூரன் [Detriot-Port Huron], ரயில் பாதையில் செய்தித் தாள் விற்கும் பையனாக வேலையில் சேர்ந்தார். அப்போது டெட்ராய்ட் சென்ட்ரல் நிலையம், தந்திப் பதிவு ஏற்பாடு மூலம், ரயில் போக்கு வரத்தைக் கண்காணிக்க முயன்று கொண்டிருந்தது. அந்த வாய்ப்பைப் பற்றிக் கொண்டு, வேலைக்கு மனுப் போட்டு, 1863 இல் டெலகிராஃப் பயிற்சியில் நுழைந்தார். தந்திச் செய்திகள் புள்ளிக் கோடுகளாகப் [Dots & Dashes] பதிவானதால், அவரது செவிட்டுத் தன்மை வேலையை எந்த விதத்திலேயும் பாதிக்கவில்லை! பதிவானப் புள்ளிக் கோடுகளை அந்த காலத்தில் ஒருவர் படித்துப் புரிந்துதான், ஆங்கி லத்தில் மாற்றிக் கையால் எழுத வேண்டும். அதே பணியை ஆறு வருடங்கள் எடிசன் அமெரிக்காவில் தெற்கு, நடுமேற்குப் பகுதிகளில், நியூ இங்கிலாந்தில், மற்றும் கனடாவில் செய்து வந்தார். அப்போது தான் வேலையைச் சீக்கிரம் செய்ய, தந்திக் கருவியைச் செப்பனிட்டு தன் முதல் ஆக்கத் திறமைக் காட்டினார், எடிசன். 1869 இல் தன் 22 ஆம் வயதில் 'இரட்டைத் தந்தி அடிப்புச் சாதனத்தைப் ' [Duplex Telegraph with Printer] பதிவுக் கருவியுடன் இணைத்து, இரண்டு செய்திகளை ஒரே சமயத்தில், ஒரே கம்பியில் அனுப்பிக் காட்டினார், எடிசன். அத்துடன் தந்தியின் மின்குறிகளைச் சுயமாக மாற்றிச் சொற்களாய்ப் பதிவு செய்யவும் அமைத்துக் காட்டினார் .

எடிசன் தந்தி வேலையை விட்டுவிட்டு, முழு நேர ஆக்கப் பணிக்கு, நியூ யார்க் நகருக்குச் சென்றார். அங்கு ஃபிராங்க் போப்புடன் [Frank Pope] கூட்டாகச் சேர்ந்து, 'எடிசன் அகிலப் பதிப்பி ' [Edison Universal Stock Printer], மற்றும் வேறு பதிக்கும் சாதனங்களையும் படைத்தார். 1870-1875 ஆண்டுகளில் நியூ ஜெர்ஸி நியூ ஆர்க், வெஸ்ட்டர்ன் யூனியனில் [Western Union] சுயமாய் இயங்கும் தந்தி [Automatic Telegraph] ஏற்பாட்டைச் செப்பனிட்டார். ரசாயன இயக்கத்தில் ஓடிய அந்தக் கருவி ஏற்பாடு, மின்குறி அனுப்புதலை [Electrical Transmission] மிகவும் விபத்துக்குள் ளாக்கியது. அதைச் சீர்ப்படுத்த முற்பட்ட எடிசன் தன், ரசாயன ஞானத்தை உயர்த்த வேண்டிய தாயிற்று. அந்த ஆராய்ச்சி விளைவில், மின்சாரப் பேனா [Electric Pen], பிரதி எடுப்பி [Mimeograph] போன்ற சாதனங்கள் உருவாகின. மேலும் அந்த அனுபவம், எடிசன் எதிர்பாரதவாறு கிராமஃபோனைக் [Phonograph] கண்டுபிடிக்கவும் ஏதுவாயிற்று.

முதல் கிராமஃபோன் கண்டுபிடிப்பு:

புதிய சாதனங்களைக் கண்டு பிடிக்கும் போது, வேறு பல அரிய உபசாதனங்களும் இடையில் தோன்றின. அவற்றுள் ஒன்று 'கரி அனுப்பி ' [Carbon Transmitter] என்னும் சாதனம். 1877 இல் எதிர்பாரதவாறு, எடிசன் கண்டு பிடித்தவற்றிலே, மிக நூதன முன்னோடிச் சாதனம், கிராமஃபோன். பிரான்சின் ஆக்க மேதை, லியான் ஸ்காட் [Leon Scott] 'ஒவ்வொரு ஒலியையும் ஒரு தகடு மீது பதிவு செய்ய முடிந்தால், அவை சுருக்கெழுத்து போல் தனித்துவ உருவில் அமையும் ' என்ற கோட்பாடை ஒரு நூலில் எழுதி யிருந்தார். அதுதான் ஒலி மின்வடிவாய் எழுதும், ஒலிவரைவு [Phonography] எனப்படுவது. அக் கோட்பாடை நிரூபித்துக் காட்ட, எடிசன் ஓர் ஊசியைத் தன் கரியனுப்பியுடன் சேர்த்து, ஒலிச் சுவடுகள் பாரஃபின் [Paraffin] தாளில் பதியுமாறு செய்தார். அவர் வியக்கும்படி, ஒலிச் சுவடுகள் கண்ணுக்குத் தெரியாத வடிவில், தலை எழுத்துப் போல் கிறுக்கப் பட்டு நுணுக்க மாகத் தாளில் வரையப் பட்டிருந்தன. பிறகு ஊசியை ஒலிச் சுவடின் மீது உரசி, அதைப் ஒலிபெருக்கி மூலம் கேட்டதில், பதியப் பட்ட ஓசை மீண்டும் காதில் ஒலித்தது!

எடிசன் அடுத்து ஓர் உருளை [Cylinder] மீது தகரத் தாளைச் [Tin Foil] சுற்றி ஒலிச் சுவடைப் பதிவு செய்து காட்டினார். 1877 டிசம்பரில் அதற்கு எடிசன், தகரத்தாள் கிராமஃபோன் [Tinfoil Phonograph] என்னும் பெயரிட்டார். ஆனால் கிராமஃபோன் ஆய்வுக் கூடத்திலிருந்து வர்த்தகத் துறைக்கு வர இன்னும் பத்தாண்டுகள் ஆயின.

மின்குமிழி [Electric Bulb] மின்சக்தி ஜனனி [Generator] கண்டுபிடிப்பு:

எடிசன் காலத்தில் வாயு விளக்குகள்தான் [Gas Light] வீதிக் கம்பங்களில் பயன் படுத்தப்பட்டன. ஐம்பது ஆண்டுகளாக 'மின்சார விளக்கு ' பலருக்குக் கனவாகவும், முயலும் படைப்பாளி எஞ்சினியர்களுக்குப் படு தோல்வியாகவும் இருந்து வந்தது! அப்போதுதான் விஞ்ஞானிகள் 'மின்வீச்சு விளக்கு ' [Electric Arc Lighting] சம்பந்தமாக பலவித ஆய்வுகள் செய்து வந்த காலம். 1878 ஜூலை மாதம் 29 ஆம் தேதி சூரிய கிரகணத்தின் போது, ராக்கி மலைத்தொடர் மீது சில ஆராய்ச்சிகள் செய்ய பல அமெரிக்க விஞ்ஞானிகள் சென்றிருந்தனர். கிரகணத்தின் போது 'சூரிய வெளிக்கனல் ' [Sun 's Corona] எழுப்பிய வெப்ப உஷ்ண வேறுபாட்டை அளக்க, அவர்களுக்கு ஒரு கருவி தேவையானது. எடிசன் ஒரு கரிப் பொட்டுச் [Carbon Button] சாதனத்தைப் பயன் படுத்தி 'நுண்ணுனர் மானி ' [Microtasi meter] என்னும் கருவியைச் செய்து கொடுத்தார். அக்கருவி மூலம் கம்பியில் ஓடும் மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்தலாம். அம்முறையைப் பயன் படுத்தி மின்சார விளக்கு ஒன்றைத் தயாரிக்க அப்போது எடிசனுக்கு ஓர் ஆர்வம் உண்டானது.

எடிசன் மின்விளக்கு ஆராய்ச்சிக்கு, 'எடிசன் மின்சார விளக்குக் கம்பெனியை ' [Edison Electric Light Company] துவங்கிய ஜெ.பி. மார்கன் குழுவினர் முன் பணமாக $ 30,000 தொகையை அளித்தார்கள். 1878 டிசம்பரில், பிரின்ஸ்டன் பல்கலைக் கழக எம்.ஏ. விஞ்ஞானப் பட்டதாரி, 26 வயதான ஃபிரான்சிஸ் அப்டன் [Francis Upton] எடிசன் ஆய்வுக் குழுவில் சேர்ந்தார். எடிசனுக்குத் தெரியாத கணித, பெளதிக அறிவியல் நுணுக்கங்கள் யாவும், இளைஞர் ஃபிரான்சிஸ் மூலம் கிடைத்தது. மின்தடை [Resistance] மிகுதியாய் உள்ள உலோகக் கம்பி ஒன்றை மின்விளக்கிற்கு எடிசன் முதலில் உபயோகித்தார். மின்சார அணிச் சுற்றில் [Series Circuit] செல்லும் மின்னோட்டம் [Electric Current] மிகுதியாக இருந்ததால், மின் வீச்சு விளக்கு [Eletric Arc Light] ஒன்றில் பழுது ஏற்பட்டால், எல்லா விளக்கு களும் அணைந்து போயின. எடிசன் மின் விளக்குகளை இணைச் சுற்றில் [Parallel Circuit] பிணைத்து, மின்னோட்ட அளவைக் குறைத்ததால், ஒரு விளக்கில் ஏற்படும் பழுது மற்ற விளக்குகளைப் பாதிக்க வில்லை. எடிசன் குழுவினர், பிளாடினம் கம்பியைச் சுருளைச் [Platinum Filament] சூன்யக் குமிழி [Vacuum Bulb] ஒன்றில் உபயோகித்துக், கட்டுப் படுத்திய மின்னோட்டத்தில் ஒளிர வைத்து, முதல் மின்விளக்கை உண்டாக்கிக் காட்டினார்கள்.

இதற்கு இடையில் 1879 இல் எடிசன், அப்டன் இருவரும் முதல் மின்சார ஜனனியை உண்டாக்க போதிய சோதனைகள் செய்து முடித்தார்கள். யந்திர சக்தியில் ஓட்டினால் ஜனனியில் மின்னழுத்தம் [Voltage] உண்டாகி, கம்ப்ி முனையில் மின்திறம் [Electric Power] கிடைக்கிறது. எதிர்மறையாக ஜனனியின் முனைகளில், மின்னழுத்தம் செலுத்தினால், அதே சாதனம் யந்திர சக்தியைத் தரும் மின்சார மோட்டார் [Electric Motor] ஆனதை எடிசன் நிரூபித்துக் காட்டினார். இதுவும் அவரது முதல் சாதனையே!

1881 ஜனவரியில் முதல் 'விளக்கொளி மின்சார அமைப்பு ' [Incadescent Electric Power System] வர்த்தகத் துறை ஏற்பாடு, நியூ யார்க் 'ஹிந்த் & கெட்சம் ' [Hind & Ketcham] அச்சக மாளிகையில் நிர்மாணிக்குப் பட்டது. நியூ யார்க் கீழ் மன்ஹாட்டனில் அமைந்த, உலகின் முதல் வர்த்தக 'மத்திய மின்சார ஏற்பாடு ' [Central Power System], எடிசன் நேரடிப் பார்வையில் நிறுவப் பட்டது! அது 1882 செப்டம்பர் முதல் இயங்க ஆரம்ப்ித்தது. அந்த மின்விளக்கு அமைப்பு வளர்ச்சி அடைந்து, பின் பெரிய ஹோட்டல்கள், அரங்க மேடைகள், வாணிபத் துறைகள், வர்த்தகக் கடைகள் யாவற்றிலும் மின்குமிழி ஒளி வீச, ஆக்க மேதை எடிசனின் புகழ் உலகெங்கும் பரவியது.

விளக்கு எரியும் போது, சூனியமான மின்குமிழிச் [Vacuum Bulb] சுருள் கம்பியின் நேர்முனையில் [Positive Pole] ஒருவித நீல நிறவொளி [Blue Glow] சூழ்ந்து கொண்டிருந்தது. 1883 இல் எடிசன் மின்குமிழியைப் பதிவு செய்த போது, அந் நிகழ்ச்சிக்கு 'எடிசன் விளைவு ' [Edison Effect] என்று பெயர் கொடுத்தனர். பதினைந்து ஆண்டுகள் கழித்து 1998 இல் ஜே. ஜே. தாம்ஸன் [J.J. Thomson] முதன் முதல் 'எதிர்த்துகள் ' [Electron] பரமாணுவைக் கண்டுபிடித்தார். விஞ்ஞானிகள் பின்னால் எடிசன் விளைவுக்கு விளக்கம் தந்தனர். அதாவது எதிர்த்துகள் [Electrons] சூடான முனையிலிருந்து தண்மையான முனைக்கு [Cold Electrode], வெப்பவியல் வீச்சால் [Thermionic Emission] பயணமாகும் போது, நேர்முனையில் அப்படி ஒரு நீல நிறவொளி எழுகிறது! அதுவே பின்னால் 'எதிர்த்துகள் குமிழி ' [Electron Tube] தோன்ற வழி வகுத்து 'மின்னியல் தொழிற் துறைக்கு ' [Electronics Industry] அடிகோலியது.

மூவிக் காமிராக் [Movie Camera] கண்டுபிடிப்பு:

போனோகிராஃபில் வெற்றி பெற்ற எடிசன், அடுத்து மூவிக் காமிரா வளர்ச்சியில் ஆழ்ந்து வேலை செய்தார். அதைப் பற்றி ஒரு சமயம் எடிசன் கூறியது: 'கற்பனையில் எனக்கு இது முன்பே உதயமானதுதான். போனோகிராஃப் எப்படிக் காதுக்கு இசை விருந்தளிக்கிறதோ, அது போல் 'நகரும் படம் ' [Movie] மனிதர் கண்ணுக்கு விருந்தளிக்கச் செய்ய முடியும். போனோகிராஃப் ஒலி நுணுக்கத்தை மூவிக் காமிரா யந்திரத்துடன் இணைத்துப் 'பேசும் படம் ' [Talkies] என்னால் தயாரிக்க முடியும் ' இந்த சிந்தனா யுக்தி எடிசனுக்கு பத்தாண்டுகளாக இருந்திருக்கிறது. 1880 இல் முதல் நகரும் படம் வெளிவரப் பொறுப்பாக இருந்தவர், எடிசனுக்கு உதவியாளராகச் சேர்ந்த, W.K.L. டிக்ஸன் [W.K.L. Dickson]. எடிசன் நகரும் படக் காமிராவை விருத்தி செய்ய, பலரது படைப்பு களைக் களவு செய்தார். தன் கீழ் பணியாற்றும் நிபுணர்களின் ஆக்கங்களையும் பயன் படுத்திக் கொண்டார்.

1888 இல் எடிசன் முதலில் படைத்த மூவிக் காமிரா, கினெட்டாஸ்கோப் [Kinetoscope]. ஆனால் படம் யாவும் அதில் சற்று மங்கலாகத்தான் தெரிந்தன. 1889 இல் பிரிட்டனில் வாழ்ந்த ஃபிரீஸ்-கிரீன் [Friese-Green] ஒருவிதப் பதிவு நாடாவைப் [Sensitized Ribbon] பயன் படுத்தி உருவப் படங்களைப் பதித்தார். அதே நாடாவை சில வருடங்களுக்கு முன்பு, அமெரிக்காவில் ஜார்ஜ் ஈஸ்ட்மன் [George Eastman] உபயோகித்து ஓளிப் படங்களை அந்த நாடாவிலே எடுக்கும்படி செய்தார். முதல் முறையாக, எடிசன் கினெடாஸ்கோப் காமிராவை விருத்தி செய்து, ஐம்பது அடி நீளமுள்ள படச் சுருளை, மின்சார மோட்டார் மூலம் சுற்ற வைத்து, உருப்பெருக்கியின் [Magnifying Glass] வழியாகப் பேசும் படங்களை வெள்ளித் திரையில் காட்டிக் களிக்கச் செய்தார். அந்த மூவிக் காமிராவை எடிசன் 1891 இல் அமெரிக்காவில் பதிவு செய்தார்.

'ஒளியையும், ஒலியையும் இணைத்துப் பேசும் படத்தைத் திரையில் காட்டிச் சிறுவர், சிறுமிகளுக்குச் சிறந்த முறையில் பாடம் சொல்லிக் கொடுக்கலாம் ', என்னும் கருத்தில் உறுதியான நம்பிக்கை காட்டினார் எடிசன். 'கல்வி புகட்டுவதில் எந்த அங்கம் முக்கிய மானது ? கண்களா ? அன்றி காதுகளா ? ' என்று ஒருவர் கேட்ட போது, எடிசன் கூறினார்: 'கண்கள்தான்! ஓலியை விட, ஒளி அதி வேகம் உடையது. காதுகளை விடக் கண்கள் விரைவாகக் கற்பவை! நகரும் படங்கள் மூலம், கண்கள் கற்றுக் கொள்வது நேரடி வழி! விரைவுப் பாதை! தெளிவாய் விளக்கும் பாதை! புத்தகத்தில் சொற்களைப் படித்து அறிவதை விட, பார்வை மூலம் படிப்பது எளியது! ' 'ஒரு படம் ஆயிரம் சொற்க ளுக்குச் சமம் ' என்பதை எடிசன் எத்தனை அழகாகச் சொல்லி விட்டார்! ஒரு நிலைப் படம் ஆயிரம் சொற்களுக்குச் சமம் என்றால், ஓடும் படம் எத்தனை ஆயிரம் சொற்களுக்கு இணையாகும், என்பதைக் கணக்கிட முடியுமா ?

அமெரிக்க ஒளி விளக்கு அணைந்தது:

ஆக்க மேதை எடிசன் தன் 84 ஆம் வயதில், 1931 அக்டோபர் 18 ஆம் தேதி நியூ ஜெர்சி வெஸ்ட் ஆரஞ்ச் நகரில் காலமானார். அமெரிக்க ஜனாதிபதி ஹெர்பர்ட் ஹூவர் [President Herbert Hoover] எடிசன் உடல் அடக்கத்தின் போது அமெரிக்கா வெங்கும் தேவையான விளக்குகளைத் தவிர, மற்ற மின்விளக்கு களை, ஒரு நிமிடம் அணைக்கும்படி ஆணையிட்டிருந்தார். அக்டோபர் 21 ஆம் தேதி மாலை 9:59 [EST] மணிக்கு அவரது புகழுடல் அடக்க மானது. நியூ யார்க்கில் மாலை 9:59 [EST] மணிக்கு 'விடுதலை விக்கிரகத்தின் ' [Statue of Liberty] கையில் இருந்த தீப்பந்தம் ஒளி இழந்தது! பிராட்வே விளக்குகள் ஒளி மங்கின! வீதியில் பயணப் போக்கு [Traffic Signals] விளக்குகளைத் தவிர மற்ற எல்லா விளக்குகளும் கண்ணை மூடின! சிகாகோவில் சரியாக 8:59 மணிக்கு வீதியில் மின்சார வண்டிகள் [Street Cars] ஒரு நிமிடம் நின்றன! மின்விளக்குகள் அணைந்தன! டென்வரில் 7:59 P.M மலை நேரத்தில் விளக்குகள் ஒரு நிமிடம் கண்ணை மூடி அஞ்சலி செய்தன! கிழக்கே எடிசன் உடல் அடக்கமான சமயத்தில், மேற்கே காலிஃபோர்னியாவில் பசிஃபிக் நேரம் 6:59 P.M. மணிக்கு, சூரியனும் செவ்வானில் தன் ஒளியைக் குறைத்து இருட்கடலில் மூழ்கியது! விளக்குகளும் ஒரு நிமிடம் இமை மூடின! ஆனால் எடிசன் ஆத்மா வாகிய மின்விளக்கு இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் சுடர் விட்டு, அகில உலகுக்கும் ஒளி பாய்ச்சிக் கொண்டே இருக்கும்!

Saturday, April 21, 2012

ஐபிஎல் நகைச்சுவைகள் – IPL COMEDY 2012


  கணேஷ் : என்ன தல கைலேயே போட்டுடானுகளா?

சச்சின் : அதுகூட பரவாயில்லை தம்பி! ஆனா இவனுக, நான் மேட்ச்ல அடிச்சாலும் சாதனைக்காக விளையாட்றேன்னு சொல்லுராணுக, அடிக்கலேன்னாலும் வயசாயிடிச்சி ரிடயர்ட் ஆகணும்னு சொல்லுராணுக! அதுதான் ரொம்ப வலிக்குது!





அவனே கம்முனுதான் போனான், அவன உசுப்பேத்திவிட்டு அவன் நொங்கு நொங்குன்னு நொங்கி கடைசியா சொன்னான்பாரு, எங்களோட இந்த வெற்றிக்கு காரணம் உசுப்பேத்திவிட்ட அஸ்வின்!



என்னைக்காச்சும் நான் ஒழுங்கா பந்துவீசி நீ பாத்திருக்கியா?
இல்லை?
அப்புறம் ஏன் அவுட் கொடுக்கலை?
நோ-பால்
  


தோனி: அது என்னன்னே தெரியல மச்சி, நான் ஒரு கழுதைய கொண்டுபோய் விட்டாலும் அது சூப்பரா விளையாடுது?
‍‌‍ஜடேஜா: என்ன சொல்லலையே?
தோனி:

Tuesday, April 17, 2012

கின்னஸ் புத்தகம் உருவான விதம்.!!!



கின்னஸ் புத்தகம்” எப்படி உருவானது தெரியுமா உங்களுக்கு?
1951ம் வருடம் ஒரு நாள் மாலைப்பொழுது, அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ‘கின்னஸ் வாட் சாலைஎன்ற அமைப்பிற்கு நிர்வாக இயக்குநராக இருந்தவர் ‘சர்க்யூ பீவர்’. இவர் வேட்டையாடுவதற்காக ஒரு நதிக் கரையோரம் சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஆகாயத்தில் ஒரு நீண்ட கோடு போல ஏராளமான பறவைகள் பறந்து சென்று கொண்டிருந்தன. அவர், உடனே அவற்றை சுட எண்ணி, குனிந்து தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்தார்.
எடுத்து நிமிர்ந்தவர் அந்தப் பறவைக்கூட்டம் கண்ணுக்கே தெரியாத தொலைவுக்குச் சென்று விட்டதை அறிந்தார். வியப்பில் உறைந்து போனார். என்ன ஒரு வேகம்! ‘கோல்டன் பிளவர்’ என்ற பறவையினம் அவை.

அப்போதுதான் அவருக்கு ஒரு சிந்தனை பளிச்சிட்டது. ஒருவேளை உலகிலேயே மிகவும் வேகமாகப் பறக்கும் பறவையினம் இவையாகத்தான் இருக்குமோ என்று எண்ணினார். பலரிடம் பல புத்தகங்களிலும் விடை தேடினார். பலன்தான் இல்லை.
இது குறித்து நாமே ஒரு புத்தகம் வெளியிட்டால் என்ன என்று யோசித்தார். அவர் உடனே லண்டன் சென்றார். அங்கு அரசாங்கத்திற்காக புள்ளி விவரங்கள் சேகரிக்கும் நோரிஸ் மைக் வைக்ட்டர், ரோஸ் மைக் வைக்ட்டர் என்ற இரட்டைச் சகோதரர்களைச் சந்தித்தார்.

தனது புதிய புத்தக யோசனையை தெரிவித்தார். அவர்களும் ஒத்துழைப்புதர முன்வந்தனர். மூவரின் உழைப்பில் பிறந்ததுதான் கின்னஸ் புத்தகம். முதல் கின்னஸ் புத்தகம் 1955ம் ஆண்டு ஆகஸ்ட் 27ல் 198 பக்கங்களுடன் அவர்களால் வெளியிடப்பட்டது.

உலகிலேயே மிகவும் பெரியது. மிகவும் சிறியது ஆகிய விவரங்கள் இதில் அடங்கியிருந்தன. மேலும் அவ்வாண்டு வெளியான புத்தகங்களில் அமோக விற்பனையான புத்தகம் என்ற பெருமையும் கின்னஸ் புத்தகத்திற்குக் கிடைத்தது.

அன்று தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது சாதனை புரிந்தவர்களைப் பற்றிய செய்திகளோடு புத்தகம் வெளிவந்தது. தொடர்ந்து ஆண்டுதோறும் வெளிவரும் கின்னஸ் புத்தகம் இடையில் 1957, 1959 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மட்டும் வெளிவரவில்லை.இதற்கான காரணம் தெரியவில்லை. தனிப்பட்ட நபரின் எந்த ஒரு புதிய சாதனையையும் கின்னஸ் புத்தகத்திற்கு அனுப்பலாம்.

இதற்கான தகுந்த ஆதாரங்களைக் காட்டவேண்டும் எப்படி? என பார்ப்போம்.

சாதனையாளரின் சாதனை பற்றிய பத்திரிகை செய்திகள், பார்வையாளர்களாக இருந்த பொறுப்பானவர்களின் கையெழுத்துத் தொகுப்பு, இவை உண்மைதான் என்று ஒரு பொறுப்பான நிறுவனத்தின் தலைவர் வழங்கும் உறுதிமொழி.

இவ்வளவும் அனுப்ப வேண்டும். புதிய சாதனை முந்தைய சாதனையை முறியடிப்பதற்காக இருந்தால் அந்தச் செய்தியும் சாதனையாளர் பற்றிய தகவலும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும்.

கின்னஸ் புத்தகத்தில் சாதனை நிகழ்ச்சிகளை வெளியிடுவார்களே தவிர, யாரையும் சாதனைபுரியத் தூண்டமாட்டார்கள். கின்னஸ் புத்தகம் பற்றிக் கூட கின்னஸ் புத்தகத்தில் 1974ல் இடம் பெற்றது.
அது உலகிலேயே அதிகமாக விற்பனையான புத்தகம் என்ற வரிசையில்தான். முதலில் ஆங்கிலத்தில் மட்டுமே வெளிவந்த புத்தகம் விரைவிலேயே 35 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

மென்பொருள் செய்திகள் மூன்று


கூகுள் வாங்கிய ஜீமெயில்!

எல்லா நாடுகளிலும் ஜீமெயில் முகவரி @gmail.com-னுதான் முடியும்.

ஆனால் இதுவரை ஜெர்மனியில் மட்டும் @googlemail.com-னுதான் இருந்தது. ஏன்னா G எழுத்தை தன் பேரில் முதல் எழுத்தாக வைத்திருந்த ஒருத்தன் அந்த பேரை ஜெர்மனியில் டிரேட்மார்க் செய்துவைத்திருந்தான்.

கூகுளும் எவ்வளவோ போராடிப் பார்த்தது. போன வாரம்தான் ஒரு வழியா அந்த பேரை வாங்கியது. பேரை விட்டுக்கொடுத்தவன் சும்மாவா கொடுத்திருப்பான்? இதுதான் சமயம்னு கன்னாபின்னான்னு மீட்டரை ஏத்தி இருக்கமாட்டானா?

இதேமாதிரி இங்கிலாந்திலேயும் இதே பேருக்காக கூகுள் 2010-ல் செட்டில்மென்ட் செய்தது.

சுதந்திர மைக்ரோசாஃப்ட்?!

"மைக்ரோசாப்ட் ஓப்பன் டெக்னாலஜிஸ் இன்க்" என்று ஒரு புதிய துணை நிறுவனத்தை (subsidiary) மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆரம்பித்து இருக்கிறது.

அது சில பல காரணங்களுக்காக கட்டற்ற மென்பொருள் சமூகத்துடன் சேர்ந்து செயல்பட விரும்புகிறது.

கட்டற்ற மென்பொருட்களுடன், தன் தனியுரிமை மென்பொருட்கள் சேர்ந்து சரியாக இயங்கும் வகையில் இந்த புதிய நிறுவனம் வழியாக மைக்ரோசாஃப்ட் முயற்சிகளை மேற்கொள்ளும்.

அப்படியே எம்.எஸ் ஆபீசின் ஃபைல் பார்மேட்டை கட்டற்ற மென்பொருளாக்கிவிட்டால் ஓப்பன்/லிபர்ஆபீஸை இன்னும் பலர் பயன்படுத்த முன்வருவார்கள். ஃபைல் பார்மேட் பிரச்சனையாலேயே நிறையபேர் ஓப்பன்/லிபர் ஆபீஸ் பயன்படுத்த தயங்குகிறார்கள்.

இப்போதைக்கு கிளவுட் கம்ப்யூட்டிங்தான் ஹாட் டாபிக்.

கிளவுட் ஆபரேடிங் சிஸ்டம் "ஓப்பன்ஸ்டாக்" ஒரு கட்டற்ற மென்பொருள். இதை பைத்தான் மொழியைப் பயன்படுத்தி உருவாக்கியிருக்கிறார்கள்.

லினக்சுக்கு லினக்ஸ் பெளன்டேஷன் இருக்கிறது. அதைப்போல ஓப்பன்ஸ்டாக்கும் ஒரு பெளன்டேஷன் ஆரம்பிக்க ரெட்ஹேட், ஐ.பி.எம், யாஹூ!, டெல் உட்பட 19 கம்பெனிகள்** ஒருசேர முன்வந்து இருக்கிறார்கள்.

இன்டெர்நெட் வந்து நம் வாழ்க்கை முறையையே மாற்றின மாதிரி இந்த கிளவுட் கம்ப்யூட்டிங்கும் ஒரு பெரிய சக்தியாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

ஓப்பன்ஸ்டாக் நிறுவனம் ஏப்ரல் 2012-ல் தங்களது 5வது பதிப்பை வெளியிட்டார்கள். அதற்கு செல்லப்பெயர் எஸ்ஸெக்ஸ்.

உபுன்டு மாதிரியே ஓப்பன்ஸ்டாக் பதிப்புகளுக்கும் ஏ, பி, சி, டின்னு வரிசையா பேர் வைத்து வருகிறார்கள்.

இதன் முதல் 4 பதிப்புகள்.

1. ஆஸ்டின்
2. பெக்ஸர்
3. காக்டஸ்
4. டையப்லோ.

ஓப்பன்ஸ்டாக்கின் அடுத்த ஆறாவது பதிப்புக்கு ஃபோல்ஸோம் என்று பெயர் வைத்து இருக்கிறார்கள்.

இந்த கிளவுட் கம்ப்யூட்டிங்குக்கு சரியான தமிழ் வார்த்தை கண்டுபிடிங்கப்பா.

**
பிளாட்டினம் உறுப்பினர்கள்: ஏ.டி&டி, கனோனிகல், ஹெச்.பி, ஐ.பி.எம், நெபுலா, ராக்ஸ்பேஸ், ரெட்ஹேட், சுசி

தங்க உறுப்பினர்கள்
: சிஸ்கோ, க்ளியர்பாத், க்ளவுட் ஸ்கேலிங், டெல், ட்ரீம்ஹோஸ்ட், ஐ.டி.ஆர்.ஐ, மிரான்டிஸ், மார்ப்லேப்ஸ், நெட்அப், பிஸ்டன் க்ளவுட் கம்ப்யூட்டிங், யாஹூ!


 

உங்களை வியப்படைய வைக்கும் மைக்ரோசாப்டின் புதிய தளம் - Touch Effects



கடல் போல இருக்கும் இந்த இணைய உலகில் நாளுக்கு நாள் விதவிதமான இணைய தளங்கள் வந்து கொண்டு உள்ளது. ஆனால் அதில் ஒரு சில தளங்களே நம்மை கவர்கிறது. அந்த வகையில் இன்று நாம் பார்க்க போவது சோதனை பதிப்பில் உள்ள மைக்ரோசாப்டின் புதிய இணையதளம் Touch Effects. தொடர்ந்து வேலை செய்து சோர்வாகி இருக்கும் பொழுது இது போன்ற தளங்களுக்கு சென்றால் உங்கள் மனம் புத்துணர்ச்சி அடையும்.
இந்த தளத்தை ஓபன் செய்தால் புள்ளிகளுடன் ஒரு இணையதளம் வரும் அதில் உங்கள் மவுஸ் கர்சரை பயன்படுத்தி க்ளிக் செய்தும், Drag செய்தும் பாருங்கள். அங்குள்ள புள்ளிகளில் நடக்கும் ஜாலத்தை பாருங்கள். 
கீழே உள்ள போட்டோக்களை பாருங்கள்.
உங்களின் மவுசை திரையின் மீது வைத்து அழுத்தி இழுத்தால் அதற்கேற்ப உங்கள் திரை வண்ணமயமாக ஜொலிப்பதை காணலாம். குரோம், பயர்பாக்ஸ் மற்றும் IE உலவிகளில் நன்றாக வேலை செய்கிறது.
இந்த தளத்திற்கு செல்ல - Touch Effects

Tuesday, April 3, 2012

வானிலை அறிய டிவிட்டர் வரைபடம்!!!



ஊர் கூடி தேர் இழுப்பது போல உலகம் கூடி வானிலையை அறிக்கையை வெளியிட்டால் எப்படி இருக்கும்?மெட்விட் அதை தான் செய்கிறது.அதாவது உடனடி உலக வானிலையை இந்த தளம் வழங்குகிறது.
இப்போது உலகின் எந்த மூளையில் வெய்யில் காய்கிறது அல்லது மழை பெய்கிறது என்று தெரிந்து கொள்ள விரும்பினால் அதற்கான பதிலை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இணைய சேவை தான் இந்த மெட்விட்.
இந்த தளத்தை பொருத்தவரை பயனாளியும் நீங்கள் தான் பங்கேற்பாளரும் நீங்கள் தான்.அதாவது உலகம் முழுவதும் உள்ள உங்களை போன்றவர்கள் சமர்பிக்கும் வானிலை விவரங்களை வைத்து உலக வானிலை வரைபடத்தை இந்த தளம் வழங்குகிறது.
இதற்காக பயனாளிகள் வானிலை ஆய்வாளராக எல்லாம் மாற வேண்டியதில்லை.தங்கள் ஊரில் இப்போது வாபிலை எப்படி இருக்கிறது என்ற தகவலை குறும்பதிவாக டிவிட்டர் மூலம் பகிர்ந்து கொண்டாலே போதும்.அந்த தகவலை அழகாக உலக வரைபடத்தில் அந்த இடத்தின் மீது அழகாக தோன்றச்செய்கிறது மெட்விட்.
டிவிட்டர் குறும்பதிவுகள் தகவல் சுரங்கமாக இருப்பது பலவிதங்களில் உணரப்பட்டிருக்கிறது.புதிதாக வெளீயான திரைப்படம் எப்படி இருக்கிறது என்ற பொது கருத்தை அறிய விரும்பினாலோ அல்லது பங்குச்சந்தையின் போக்கு எப்படி இருக்கும் என்று அறிய விரும்பினாலோ டிவிட்டர் குறும்பதிவுகளை அகழ்வாராய்ச்சி செய்தாலோ போதுமானது.
இதற்கேற்ற சேவைகளும் அறிமுகமாகியிருக்கின்றன.
இப்போது உலக வானிலையையும் இதே முறையில் தெரிந்து கொள்ள உதவும் நோக்கத்தோடு மெட்விட் உருவாக்கப்பட்டுள்ளது.
வானிலை அறிக்கை என்றாலே கொஞ்சம் வில்லங்கமானது தான்.வானிலை அறிக்கையின் துல்லியம் குறித்து பலவிதமான விமர்சங்களும் துணுக்குகளும் இருக்கின்றன.வானிலை நிபுணர்கள் மழை பெய்யும் என்றால் அன்று வெய்யில் காயும் என்று நாம் கிண்டல் செய்வதை மீறி வானிலை அறிக்கையை நாமும் ஆவலோடு எதிர்பார்க்கும் தருணங்கள் இல்லாமல் இல்லை.குறிப்பாக வெளியூர் பயணங்களின் போது அங்கே வானிலை நிலவர, எப்படி என்பதை தெரிந்து கொள்ள விரும்புவோம்.
இது போன்ற நேரங்களில் வானிலையை தெரிந்து கொள்ள வழிகளும் இல்லாமல் இல்லை.வானிலை விவரங்களை வழங்கும் இணையதளங்களும் இருக்கின்றன.
ஆனால் இவையெல்லாமே உத்தேசமானவையே.வானம் மேகமூட்டமாக காணப்படும்,கடலோரங்களில் குளிர் காற்று வீசும் என்பதெல்லாம் மிகவும் பொதுவானவை.வெளியூர் செல்பவர்கள் எதிர்பார்ப்பது,அங்கே இப்போது மழை பெய்கிறதா என்பது போன்ற அவர்களின் பயணத்தை பாதிக்ககூடிய இன்னும் துல்லியமான விவரங்களை தான்.
இது போன்ற தகவல்களை பெற் அந்த ஊரில் இருக்கும் நண்பர்களை தொடர்பு கொண்டு கேட்பது தான் சிறந்த வழி.ஆனால் எல்லோருக்கும் எல்லா ஊர்களிலும் நண்பர்கள் இருக்க வாய்ப்பில்லை.இருக்கும் நண்பர்களையும் தேவையான‌ நேரத்தில் தொடர்பு கொள்வது சாத்தியமில்லை.
ஆனால் டிவிட்டர் மூலம் அப்போதைய வானிலை பற்றி பயனாளிகள் பகிர்ந்து கொள்ளும் பதிவுகள் இத்தகைய விவரங்களை தரக்கூடும்.
மெட்விட் இந்த அற்புதத்தை தான் சாத்தியமாக்குகிறது.
மெட்விட் மூலம் பகிரப்படும் வானிலை பதிவுகளை அந்த அந்த நகரங்களின் மீது உலக வரைபடத்தில் கொடி போல பறக்கவிடப்படுகிறது.அதிலும் மிக அழகாக வானிலையின் தனமையை உணர்த்தக்கூடிய வகையிலான சுவார்ஸ்யமான அடையாளங்களோடு இடம்பெறுகின்றன.
உதாரணத்திற்கு மழை பெய்வதற்கு ஒரு அடையாளம்.வெய்யிலுக்கு ஒரு அடையாளம்.
ஆக வானிலையை அறிய விரும்புகிறவர்கள் இந்த தளத்தில் உள்ள வரைபடத்தில் தாங்கள் தேடும் நகரின் மீது மவுசை கொண்டு சென்றால் போதும் அந்த இடத்தில் இருந்து பகிரப்பட்ட வானிலை குறும்பதிவுகளை காணலாம்.
அவை பெரும்பாலும் அப்போதைய விவரங்களாக இருக்கும் என்பதால் இதோ இந்த நொடியில் உலகின் எந்த பகுதியில் என்ன நிலைமை என்பதை இந்த வரைபடத்தை பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.
ஒரு நகரில் திடிரென‌ பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டால் அதனை டிவிட்டரில் பகிர்ந்து கொள்வது பலர‌து இயல்பு.அந்த தகவல்களை ஒருங்கிணைத்து மேலும் பயனுள்ளதாக ஆக்குகிறது மெட்விட்.நீங்களும் கூட இதில் பங்கேற்று உங்கள் நகர வானிலையை பதிவு செய்யலாம்.ஏற்கனவே பகிரப்பட்ட விவரங்களோடு கூடுதல் தகவல்களை அளிக்கலாம்.முடிந்தால் புகைப்படத்தையும் இணைக்கலாம்.
மழை பெய்கிறது என்ற விவரத்தோடு மழை பெய்யும் காட்சியை புகைப்படமாக பார்க்கும் போது அதன் தீவரம் தெளிவாக புரியும் தானே.
உங்கள் டிவிட்டர் அல்லது பேஸ்புக் கணக்கு மூலமே இந்த தளத்தில் குறும்பதிவுகளை வெளியிடலாம்.
இணையதள முகவரி;http://metwit.com/
More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget