/* Flying Css3 menu www.bloggertrix.com*/
Showing posts with label Facts. Show all posts
Showing posts with label Facts. Show all posts

Tuesday, July 16, 2013

வாயை மூடிக்கொண்டு இருங்கள்...!!!!!



குளிர்ப் பிரதேசம் ஒன்றில் புரட்சி எண்ணங் கொண்ட ஒரு சிட்டுக்குருவி வாழ்ந்து வந்தது. இலையுதிர்கால இறுதிக் கட்டம் நெருங்கியபோது மற்ற குருவிகள் அனைத்தும் தென்திசையை நோக்கிப் பறக்க ஆயுத்தமாயின. ஆனால் இந்த சிட்டுக்க்குருவி மட்டும் அவைகளோடு செல்லக் கூடாதெனத் தீர்மானித்துவிட்டது.
குளிர்காலம் வந்தது . குளிரின் ஆக்ரோஷத்தில் அந்த சிட்டுக்குறுவி கலங்கிவிட்டது. கடைசியில் அதுவும் தெற்கு நோக்கி பறக்க தீர்மானித்த போது,

Monday, October 15, 2012

தத்துவங்கள் 100 (Part II)!!!






50.ஒரு நல்ல நூல் ஒரு நல்ல மனிதனுக்கு நல்ல சொத்தாகும். - வில்லியம் ஹாஸ்விட்

51.ஒருவனுக்கு அறிவு இருந்தும் ஆற்றல் இல்லையெனில் அவன் வாழ்வு சிறக்காது. - ஷாம்பர்ட்

52.நீ பேசும் வார்த்தைகளின் மீது உனக்குள் கட்டுப்பாடு இருக்க வேண்டும் - அரவிந்தர்

53.உலகம் எவ்வளவு பெரியதோ, அவ்வளவு பெரியதாக உங்கள் இதயத்தை விரிவாக்குங்கள் - சுவாமி விவேகானந்தர்

54.உன்னைத் தவிர வேறு யாரும் உனக்கு அமைதியைத் தர முடியாது - எமர்சன்
READ MORE

தத்துவங்கள் 100(Part I)!!!





1.அமைதியாய் இரு  -  ஊமையாய் இராதே!

2. விட்டுக்கொடு -  ஏமாளியாகாதே !

3. உயிரோடுள்ள மனிதனுக்குக் கட்டப்படும் கல்லறையே சோம்பல். - ஜெரேமி டெய்லர்.

READ MORE

4. துயரம் தலையை நரைக்கச் செய்யும். அதே சமயம் இதயத்தை வலிமையாக்கும்.- ஜார்ஜ் பெய்ஷி.

5. அரிய சாதனைகள் செய்யப்படுவது வலிமையினால் அல்ல; விடாமுயற்சியினால்தான். - ஓவிட். 

6. அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும். - சாலமன். 

7. தோல்வி குற்றம் காது. உயர்வற்ற லட்சியமே ஒரு குற்றமாகும். - ஜேம்ஸ்ரசல்


8. உங்களிடம் யாரவது உழைப்பை எதிர்பார்த்து ஒரு நிமிஷம் என்றால் என்ன என்பதை அறியாமல் சரி     சொல்லாதீர்கள்.-அலெக் மெக்கன்ஸி.

9. உன் நேரத்தைப் பாதுகாத்து கொள். அவை தீட்டப்படாத வைரங்கள்.-ரால்ஃப் வல்டோ எமர்சன். 

10 .வெற்றிபெறும் நேரத்தைவிட நாம் மகிழ்ச்சியுடனும், நம்பிக்கையுடனும் வாழும் நேரமே நாம் பெறும் பெரிய வெற்றி. 

11.ஆயிரம் நண்பர்கள் இருப்பார்கள் .சமயத்திற்கு ஒருவரும் அகப்படமாட்டார்கள். ஒரே ஒரு எதிரி இருப்பான்.எங்கேயும் எப்போதும் அவன் எதிர்ப்பட்டுக் கொண்டே இருப்பான். 

12.தேக்கம் என்பது மரணம், நீரோட்டம் என்பது வாழ்வு. 

13.அறிவு என்பது கொல்லன் பட்டறை ஈட்டியைப்போல், அவ்வப்போது தீட்டப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். 

14.அச்சம் என்பது அடைகாக்கப்படும் அழுக்காகும். 

15.ஆசிரியர் கதவைத் திறக்கிறார், நீ உன் வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கிறாய். 

16.நீங்கள் சூரியனின் ஒளியில் பிரவேசிக்கும்போது, அதன் நிழல் உங்களை பிரதிபலிக்கின்றது. 

17. .நீங்கள் உண்மையைச் செலுத்தும்போது அதுவே திரும்பக் கிடைக்கிறது. 

18.கடினமான செயல்களைக் சிறியதாகவும், புகழ்பெற்ற செயல்களை எளிமையாகவும் கையாழப் பழகவேண்டும். இதுவே உண்மையான வெற்றிக்கு அறிகுறி. 
19.நாம் வாழ்வில் ஒரு வழியைத்தேடி கொண்டிருக்கும்போதே இன்னொரு வழி எளிதாக அமைகிறது
20.எந்த முயற்சியில் நீங்கள் தீவிரமாக ஈடுபடுகிறீர்களோ, ஒரு கட்டத்தில் அதை நீங்கள் அடைகிறீர்கள். 
21.மற்றவர்கள் உங்களுக்குத் தடைக்கல்லாய் இருக்கும்போதுதான், உங்களுக்கு நிரந்தரப் பாதை வெளிச்சமிடப்படுகிறது. 
22.பழக்க வழக்ககங்களே ஒருவனை நல்லவனாகவும், தீயவனாகவும் மாற்றுகின்றன. 
23.மழைத்துளி சொன்னது, முத்துக்கான வித்து எப்பொழுதும் விழலாம். விழித்திரு, மனிதா விழித்திரு. 
24.உண்மை ஒரு நாள் வெண்றே தீரும். 
25.தன்னுடைய தவறு எது என்பதைக் கண்டுபிடிப்பவன், அறிவுடன் வாழ முதல் படிக்கட்டில் கால் வைத்துவிட்டவன் ஆகிறான். 
26.உலகின் மிகவும் தெய்வீகமானது, சக மனிதரிடம் நீங்கள் காட்டும் அன்பும், பரிவும்தான். 
27.செல்வம் குடியிருக்கும் வீட்டில் மனித பண்பு சீரழிகிறது. 
28.அழகே உண்மை, உண்மையே அழகு. 
29.அறிஞர்கள் புகழ்ச்சிக்கும், இகழ்ச்சிக்கும் இசைந்து கொடுப்பதில்லை. 
30. தன்னம்பிக்கை, துணிவு, பயம் இந்த மூன்றில் முதல் இரண்டும் அழகான உயர்வான வாழ்க்கையை அமைத்து தருகின்றன. 

தன்னம்பிக்கை இருந்தால் துணிந்து காரியத்தில் இறங்கி செயல்பட முடியும். தன்னம்பிக்கை இல்லை என்றால் அது பயத்தை நமக்கு பரிசாகத் தருகிறது. பயந்தவர்கள் எதிலும் துணிச்சலுடன் காரியத்தில் ஈடுபட மாட்டார்கள். துணிச்சலுடன் காரியத்தில் ஈடுபட்டு இருப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கவேண்டும். 

31.நல்ல சிந்தனைத் திறன் மட்டும் இருந்தால் போதாது, அதை எப்போதும் செயல்படுத்திக்கொண்டே கடைசிவரை வாழ்வதில்தான் வெற்றியையும், மகிழ்ச்சியையும் நாம் உணர முடியும்.

32.மயக்கம், தேவை இல்லாத பயம், அளவுக்கு மிஞ்சிய தூக்கம்,ஆத்திரம்,சோம்பல்,எதையும் தாமதமாக செய்தல், இந்த ஆறு குனங்களும் முன்னேற்றப் பாதையின் முட்டுக் கட்டைகள்.4.நான்கு வேண்டும்.

i )ஒழுக்கம் உள்ள நடத்தைக்கு நல்ல நண்பர்கள் தேவை.

ii) அறிவு வளர நல்ல விஷயம் அறிந்த ஆசான் வேண்டும்.

iii) சுவையான உணவுக்கு அன்புள்ள தாய் வேண்டும். 

iv) தூய்மையான சிந்தனை ஏற்பட தெய்வபக்தி வேண்டும். 

மகிழ்ச்சியின் சாவி பொறுமை. - துருக்கி 

*சிந்தனையின் வெளியீடு இலக்கியம். - வேனா 

*அன்புள்ள மனம் சலனமற்று ஓடும் நதி. - ரிக்டர் 

*இந்த உலகில் மதம் ஒரு நல்ல கவசம், ஆனால் மோசமான மேலங்கி.- புல்லர் 

*இதயங்கள் சேர்ந்திருக்கட்டும், ஆனால் கூடாரங்களை தனித்தனியாக அமையுங்கள். - 

*மனம், வாக்கு, உடம்பு மூன்றையும் அடக்கத்தில் வைத்திரு. - கம்பர்.

*அடக்கமே உன்னை அமரனாகச் செய்யும். அதுவும் இளமையில் அந்த அடக்கம் வருவது பொன்மலர் நாற்றமுடைத்து போன்ற சிறப்பைத் தரும். - வாரியார்.

நாம அடுத்தவங்களுக்கு என்ன நினைக்கிறோமோ செய்கிறோமோ அதைத்தான் ஆண்டவன் நமக்கு நினைப்பாரு, செய்வாரு.

32.நல்ல சொற்கள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. நல்ல செயல்கள் நம்மை மெளனமாக்குகின்றன.- பிரான்ஸ்

33. பிரார்த்தனையின் முதல் திறவுகோல் சுத்தமாக இருத்தல்.

34 உலகில் இருவகை குடும்பத்தினரே இருக்கின்றனர். அவர்கள் இருப்பவர்கள் மற்றும் இல்லாதவர்கள். - போலந்து.

35.மனிதனை மாற்றி அமைக்கும் விதி, அவனது ஒழுக்கமே! - கிரீஸ்

36நியாயம், நேர்மை உங்கள் செயல்பாடுகளில் வெளிப்பட மரணத்தின் நினைவோடு வாழ்ந்து வாருங்கள். - லத்தீன்

37."நீரை சல்லடையில் கூட அள்ளிவிடலாம் அது பனிக்கட்டியாகும் வரை பொறுத்திருக்க வேண்டும்

38.அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான் - காந்தியடிகள் 
39.அவசரம், ஆளை மட்டுமல்ல, அலுவலையும் கெடுக்கிறது.- ஓர் அனுபவசாலி

40.இடர்களைக் கண்டு அஞ்சாமல் இருப்பதே விரைவான முன்னேற்றத்திற்கான வழியாகும். - அரவிந்தர்

41.கோபம் என்னும் அமிலம் எறியப்படும் இடத்தைவிட அதை வைத்துக் கொண்டிருக்கும் கலதத்தையே பொ¢தும் நாசப்படுத்தி விடும் - கிளெண்டல்

42.என்றாவது நான் ஆசிரியரானால், அது கல்வி போதிக்க மட்டுமல்ல, கல்வி கற்பதற்காகவும் இருக்கும் - டொரோதி தெலூஸி

43.நாம் எப்போதுமே வாழ்வதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்; ஆனால் வாழ்வதில்லை - எமர்சன்

44.மனிதனின் வாழ்க்கை பிறருக்கும் நாட்டுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் - வா¡¢யார் சுவாமிகள்

45.உண்மையிடம் அடைக்கலம் தேடியவன் பலத்தோடும் சுகத்தோடும் இருக்கிறாள் - ஜேம்ஸ் ஆலன்.

46.இறைவனின் தரிசனத்திற்காக முயற்சிக்கும் ஒருவனுக்கு தெய்வீக நாமமே புகலிடம் ஆகும். - சுவாமி ராமதாஸ்.

47.நம்பிக்கை உள்ளவர்கள் எந்த சூழலையும் சாதகமாக்கிக் கொண்டு முன்னேறுகிறார்கள் - ஓர் அறிஞர்

48.மனதைப் பொத்தல் குடிசையாக வைத்திராமல், எந்தப் புயலையும் தாங்கும் இரும்புக்கோட்டையாக வைத்திருக்கக் கற்க வேண்டும் - மு.வ.

49.நம்பிக்கை இல்லாத இடத்தில் முயற்சியும் இருக்க முடியாது. - ஜான்ஸன்

50.ஒரு நல்ல நூல் ஒரு நல்ல மனிதனுக்கு நல்ல சொத்தாகும். - வில்லியம் ஹாஸ்விட்

Tuesday, October 9, 2012

தத்துவங்கள்-!!!






ஆண்கள் நட்பை கால்பந்து மாதிரி உதைக்கிறார்கள் 
ஆனாலும் அதிலே சின்ன கீறல் கூட விழுவதில்லை 
பெண்கள் நட்பை ஒரு கண்ணாடி ஜாடி போன்று கையாளுகிறார்கள் 
ஆனால் அது விரைவிலேயே சுக்கு நூறாகிவிடுகிறது

ஒவ்வொரு தழும்புக்கு பின்னாலும் ஒரு காயம் இருக்கிறது 
ஒவ்வொரு காயத்திற்கு பின்னாலும் ஒரு கதை இருக்கிறது 
அது சொல்கிறது 
நானும் காயப்பட்டிருக்கிறேன்

Wednesday, September 26, 2012

பழைய தத்துவங்கள்(old facts)!!!


சிரிப்பதற்கு அனுமதி இல்லாத இடம் சொர்க்கமாக இருந்தாலும் 
நான் அங்கே போக விரும்பவில்லை 
- மார்டின் லூதர் கிங் 
நான் உண்மையையும் கடவுளையும் தேடிபோனேன் 
முதலில் உண்மையை கண்டேன் 
அதனால் கடவுளை இன்னும் கண்டுபுடிக்க முடியவில்லை 
- சிநோபான்சி 

                                                 READ MORE

More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget